வந்தாரய்யா வாரிசு.... கோவில்பட்டியில் பம்பரமாக பிரசாரம் செய்யும் வைகோ மகன் துரை வையாபுரி
கோவில்பட்டி: மதிமுக பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை வையாபுரி கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் விநாயகா ரமேஷுக்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ போட்டியிடுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டது. வைகோவும் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்றார்.
ஆனால் திடீரென தமக்குப் பதிலாக விநாயகா ரமேஷ் போட்டியிடுவார் என வைகோ அறிவித்தார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தம்மை முன்வைத்து கோவில்பட்டி ஜாதி மோதலுக்கு திமுக சதித் திட்டம் தீட்டுவதாக வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் வைகோவின் மகன் துரை வையாபுரி தற்போது கோவில்பட்டி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளார். இன்று மதிமுக வேட்பாளர் விநாயகா ரமேஷுக்காக கோவில்பட்டி தொகுதியில் வாக்கு சேகரித்தார் வையாபுரி.