For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா அழைப்பு மையம் எதுக்கு தெரியுமா?.... ரகசியத்தை அம்பலப்படுத்தும் வைகோ

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அம்மா அழைப்பு மையம் என்பது மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கு அல்ல... எந்த தெருவுக்கு ஓட்டுக்கு பணம் வரவில்லை என்று சொல்வதற்குத்தான் அமைக்கப்பட்டுள்ளதாக ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

சென்னையில் மக்கள் நலக் கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வைகோ கூறியதாவது:

Vaiko speaks on Amma Call centre

மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த பலர் எண்ணுகின்றனர். மக்கள் நலக்கூட்டணி தேர்தல் வரையாவது நீடிக்குமா, தேர்தலில் போட்டியிடுமா அல்லது கூட்டணி உடைந்து விடுமா என சில பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.

அரசியல் கட்சியினரும் இதே எண்ணத்துடன்தான் உள்ளனர். நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். சசிபெருமாள் மரணம், சமீபத்திய மழை வெள்ளம், ஹைதராபாத் தலித் மாணவர் தற்கொலை விவகாரம் உள்பட பல பிரச்னைகளில் நாங்கள் ஒன்றாகத்தான் போராடி வருகிறோம்.

தினமும் சந்தித்து பேசுகிறோம். நாளுக்கு நாள் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்குள் புரிதல் அதிகரித்து வருகிறது.

அம்மா அழைப்பு மையம் இதுக்குத்தான்..

நாலே முக்கால் ஆண்டு மக்களை சந்திக்காமல், ஆட்சி முடியும் தருவாயில், குறைகளை கேட்க 'அம்மா அழைப்பு மையம்' துவங்கப்பட்டுள்ளது. இது குறைகளை கேட்க அல்ல.

எங்கள் தெருவில் ஓட்டுக்கு இன்னும் பணம் வரவில்லை என மக்கள் தெரிவிப்பதற்காக இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வைகோ கூறினார்.

ஓ!

English summary
MDMK leader Vaiko said that Jayalalithaa's Amma call centre for only political purposes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X