வைகோவும் கிளம்பியாச்சு... காஞ்சிபுரத்திலிருந்து மறுமலர்ச்சிப் பயணத்தை இன்று தொடங்கினார்...
சென்னை: காஞ்சிபுரத்திலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது மறுமலர்ச்சிப் பயணத்தினை இன்று தொடங்கியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று முதல் தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். மறுமலர்ச்சிப் பயணம் என்ற பெயரில் இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.

முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா இல்லத்திற்குச் சென்று அவரது சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.
பின்னர் மாலையில் காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து வைகோ பிரசாரப் பயணத்தை தொடங்கினார். வாலாஜாபாத், படப்பை, முடிச்சூர், மாங்காடு, அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் வழியாகச் சென்று தாம்பரத்தில் முதல் நாள் பயணத்தை அவர் நிறைவு செய்கிறார்.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வைகோ பயணம் மேற்கொள்ள உள்ளார். வைகோவின் பிரசார பயணம் வெற்றிபெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வாழ்த்து கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications