வீரபாண்டிய கட்டபொம்பன் 215ஆம் ஆண்டு நினைவு நாள்: வைகோ அஞ்சலி
நெல்லை: கட்டபொம்மனின் வீரமும், தியாகமும், அநீதி மற்றும் கொடுமையை எதிர்க்கும் மனமும் இளைஞர்களுக்கு வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 215-ம் நினைவு நாள் விழா அவரது நினைவிடம் அருகே நேற்று நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜன் தலைமை வகித்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு வீமராஜா, பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு தலைவர் முருகபூபதி, திருச்செந்தூர் கட்டபொம்மன் டிரஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை துணைத் தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதிமுக பொதுசெயலாளர் வைகோ கட்டபொம்மன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, பேசியதாவது:
இளைஞர்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு பெற்றோர்களை மதித்து வாழ வேண்டும். விவசாய நிலங்களை விற்கக்கூடாது. மதுவிற்கு அடிமையாகாதீர்கள். கட்டபொம்மனின் வீரமும், தியாகமும், அநீதி மற்றும் கொடுமையை எதிர்க்கும் மனமும் இளைஞர்களுக்கு வேண்டும் என்றார் அவர்.
விழாவில், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசளிக்கப்பட்டது.
விழாவில், தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயல், கயத்தாறு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகாரமேஷ், கோவில்பட்டி நகர செயலாளர் ரமேஷ், ஆகியோர் பங்கேற்றனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தில் பங்கேற்ற அவர், 18-ஆம் தேதி சங்கரன்கோவிலில் நடைபெறும்‘புதிய பார்வை' அமைப்பின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.
19-ஆம் தேதி மாணவர் அணியின் ‘வைகோவின் வெல்லும் சொல்' பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தகசபை அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று பரிசளிக்கிறார் வைகோ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications