மனிதநேயத்துடன் தனியார் மருத்துவமனைகள் மருத்துவ உதவிகளை வழங்க முன்வரவேண்டும்: வைகோ
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு, மனிதநேயத்துடன் தனியார் மருத்துவமனைகள் மருத்துவ உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
மழை வெள்ளத்தால் உருக்குலைந்து போன சென்னை மாநகரில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து, வாழ்வாதரங்களைப் பறிகொடுத்துவிட்டு, துயரக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றனர். சென்னை வாழ் மக்களின் துயர் துடைப்பதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் மனிதநேயக் கரங்கள் உதவிக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. தொண்டுள்ளத்தோடு உதவி செய்து வருபவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொற்றுநோய் பாதிப்பு
இந்தியாவின் மருத்துவத் தலைநகராக விளங்கும் சென்னையில், மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அல்லல் படுவது வேதனை தருகிறது. மலைபோல் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதாரம் சீர்கேடு அடைந்து, தொற்று நோய்கள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உடனடித் தேவையான மருத்துவ முதல் உதவிகளை தமிழக அரசின் சார்பில் மட்டுமே முழுவதும் அளித்துவிட முடியாது.

தனியார் மருத்துவமனைகள்
எனவே சென்னை மக்களின் நிலைமையைக் கண்டுணர்ந்து தனியார் கார்ப்ரேட் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவச் சிகிச்சை நிலையங்கள் மனிதாபிமானத்துடன் மருத்துவ உதவிக்குழுக்களை அனுப்பி நோய் தொற்று தடுப்பூசிகள் போடவும், உயிர் காக்கும் மருந்துகளை வழங்கவும், நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்ளவும், உதவிட முன்வரவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று மருத்துவப்பேருதவிகள் செய்திடும் தனியார் மருத்துவமனைளை சென்னைவாழ் மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்.

தொழில்கள் முடக்கம்
மழை வெள்ளம் சூழ்ந்ததால், அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் இயங்கிய சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அங்கு பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இதே போன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டனர்.

ரூ.5000 நிதி உதவி
வறுமையில் வாடும் இத்தொழிலாளர்கள் நிலையை தமிழக அரசு கருத்தில் கொண்டு இவர்கள் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5000 மற்றும் முப்பது கிலோ அரிசி உள்ளிட்ட வெள்ள நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications