தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை வைகோ பார்வையிட்டார்... ஆனால் சாமி தரிசனம் செய்யவில்லை
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு சென்ற வைகோ அங்கு சாமி தரிசனம் செய்யவில்லை. ஆனால் சிற்பங்களை மட்டும் பார்வையிட்டார்.
தஞ்சை: கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு சென்ற வைகோ அங்கு சாமி தரிசனம் செய்யவில்லை. எனினும் சிற்பங்களை பார்வையிட்டு குறிப்புகளை எடுத்துக் கொண்டார்.
மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் நேற்று ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. பின்னர் அதிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
அந்த இடத்தை பார்வையிடுவதற்காக தஞ்சாவூர் வந்திருந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. மாதிரிமங்கலம் செல்வதற்கு முன்னர் தாராசுரம் சென்றார்.

சிவன் கோயிலுக்கு...
தாராசுவரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அப்போது அவரை சுவாமி தரிசனம் செய்ய அர்ச்சகர்கள் அழைத்தனர்.

போகவில்லை
எனினும் வைகோ சுவாமி தரிசனம் செய்யவில்லை. பகுத்தறிவு இயக்கத்தை சேர்ந்த தான் சாமி கும்பிட வர இயலாது என்று வைகோ மறுத்துவிட்டார்.

சிலைகளை பார்வை
சாமி தரிசனம் செய்யவில்லையென்றாலும் கோயில் வளாகத்தில் கலை வேலைப்பாடுகளுடன் வைக்கப்பட்ட சிற்பங்களை வைகோ பார்வையிட்டார். அதன் பின்னர் கல்வெட்டுகளை பார்த்து வியந்தார்.

குறிப்பெடுத்தார்
கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருந்த வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றை அவர் குறிப்பெடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் மாதிரிமங்கலத்துக்கு புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications