ராஜராஜ சோழன் வழிபட்ட பட்டீஸ்வரன் கோயிலில் வைகோ! பரிவாரம் கட்டி மாலை அணிவித்து மரியாதை!!
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் வழிபாடு நடத்திய கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தினர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி பிரச்சனை, மீத்தேன் திட்டம், மதுவிலக்கு ஆகிய பிரச்சினைகளில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.

அம்மன் கோவிலில் வைகோ
இந்த சுற்றுப் பயணத்தின் இடையே கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலுக்கு வைகோ சென்றார்.

பரிவட்டம் கட்டி..
அங்கு வைகோவுக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து கோயில் நிர்வாகத்தின் மரியாதை செலுத்தினர். பின்னர் வைகோ முன்னிலையில் பூஜைகள் நடத்தப்பட்டன.

ராஜராஜன் வழிபாடு..
அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய வைகோ, ராஜராஜ சோழன் தன் இலங்கைப் போருக்கு செல்வதற்கு முன்பாக இதே பட்டீஸ்வரன் துர்க்கை அம்மனை வணங்கிவிட்டுத்தான் தன் பயணத்தைத் துவங்கினான். அதை நினைவில் கொண்டுதான் நான் இக்கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்றார்.

மழபாடி..
தற்போது பட்டீஸ்வரம் என்ற ஊர் சோழர்காலத்தில் மழபாடி என்றழைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பு இந்த கோயிலில் அருள்வாக்கு அனுமதி பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications