விருதுநகர்- வைகோ, ஈரோடு- கணேசமூர்த்தி; காஞ்சி- மல்லை சத்யா.. மதிமுக வேட்பாளர் பட்டியலும் ரெடி?
சென்னை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, போட்டியிடும் தொகுதிகளை மட்டுமின்றி வேட்பாளர்களையும் இறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் நிபந்தனையின்றி சேருவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு முன்னரே பாஜகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமது கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் வைகோ தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதில் சில தொகுதிகளை பாமக, பாஜக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மதிமுக குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதுடன் வேட்பாளர்களையும் இறுதி செய்து வைத்திருப்பதாக தெரிகிறது.
விருதுநகரில் வைகோ, ஈரோட்டில் கணேசமூர்த்தி
இதன்படி
விருதுநகரில் வைகோ,
தூத்துக்குடியில் ஜோயல்,
பொள்ளாச்சியில் ஈஸ்வரன்,
ஈரோட்டில் கணேசமூர்த்தி எம்.பி.,
காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா,
திருச்சியில் திருமதி ரொக்கையா
ஆகியோர் நிச்சயம் போட்டியிடுவார்கள் என்றும் இந்த தொகுதிகளைப் போராடியேனும் வைகோ பெற்றுவிடுவார் என்றும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications