For Daily Alerts
Just In
என்னை உயர்த்திய தமிழ்ச் சமூகத்தை புண்படுத்துவேனா.. வைரமுத்து விளக்கம்
சென்னை: ஆண்டாள் சர்ச்சை குறித்து கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். ஆண்டாளை உயர்த்தும் வகையிலானதே எனது கட்டுரையின் நோக்கம். என்னை உயர்த்திய தமிழ்ச் சமூகத்தை நான் எப்படி புண்படுத்துவேன் என்றும் அவர் கேட்டுள்ளார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டன. இதுதொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் உலுக்கி வருகின்றன. இதன் உச்சமாக பாஜகவின் எச். ராஜா உதிர்த்த வார்த்தைகள் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி விட்டன.
இந்தநிலையில் வைரமுத்து தனது கட்டுரை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள டிவீட்டுகள்:
ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே நோக்கம்.. pic.twitter.com/w9aC7Cbc9e
— வைரமுத்து (@vairamuthu) January 13, 2018
Comments
English summary
Poet Vairamuthu has issued a clarification on his article on Aandal. He has expalined the story and asked the concern to undrestand the article first before slamming him.
Story first published: Saturday, January 13, 2018, 22:12 [IST]