மருத்துவமனையில் இருந்தபடியே உள்ளாட்சி தேர்தல் பணிசெய்கிறார் ஜெ.: வளர்மதி
சென்னை: மருத்துவமனையில் இருந்தபடியே அரசு மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகளை முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வளர்மதி கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார். மருத்துவமனையில் இருந்தவறே அரசு மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்.
பொறாமை பிடித்த சிலர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு வளர்மதி கூறினார்.












Click it and Unblock the Notifications