போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 72 பேர் கைது: வள்ளியூரில் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: வள்ளியூரில் பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 72 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இப்போராட்டம் நாளை தொடங்குவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், திடீரென இன்று முதலே போக்குவரத்து ஊழியர்கள் தங்களது போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் போக்குவரத்து பணிமனைக்கு முன் போராட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளர்கள் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications