வனரோஜா வந்த கார் பள்ளத்தில் உருண்டு விபத்து..!
திருவண்ணாமலை: ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி. வன ரோஜா பயணித்த கார் பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானதில் அவரும், அவரத் கணவர், கார் டிரைவர் ஆகியோர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை தொகுதி எம்.பி. வனரோஜா. இவர் செங்கம் நகரில் வசித்து வருகிறார். ஓ.பி.எஸ் அணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த வனரோஜா இங்கேயே தங்கியிருந்தார். நேற்று தனது ஊருக்கு காரில் புறப்பட்டார். காரை திருமலை என்பவர் ஓட்டிச் சென்றார்.
காரில் வனரோஜாவும், அவரது கணவரும் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தனர். நள்ளிரவைத் தாண்டி திருவண்ணாமலை - செங்கம் சாலையில் போயக் கொண்டிருந்தபோது, திடீரென கார் தாறுமாறாக ஓடி அருகே இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தோர் ஓடி வந்தனர்.
வனரோஜா, கணவர், கார் டிரைவர் மூவருக்கும் நல்ல அடி. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான காயம் ஏதும் இல்லை. உடனடியாக போலீஸாரும் விரைந்து வந்து அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்குப் பின்னர் வனரோஜா உள்ளிட்டோர் திரும்பினர்.
கார் டிரைவர் தூங்கி விட்டதால் விபத்து நடந்தது அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications