வடகிழக்கு மாகாணங்கள் இணைப்பு மூலமே ஈழத் தமிழர் அச்சமின்றி வாழ முடியும்: வரதராஜ பெருமாள்
கோயம்புத்தூர்: இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இனைப்பதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்கள் அச்சமின்றி வாழ முடியும் என்று வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் கூறியுள்ளார்.
1987-ல் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ஈழத் தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை. இதனால் இந்திய அமைதிப் படை உதவியுடன் ஈ.பி.ஆர்.எல். இயக்கத்தைச் சேர்ந்த வரதராஜப் பெருமாளை முதல்வராகக் கொண்டு வடகிழக்கில் ஒரு பொம்மை அரசை அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி உருவாக்கினார்.

இந்தியாவுக்கு தப்பி வந்த வரதராஜ பெருமாள்
பின்னர் 1990ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய போது வரதாரஜப் பெருமாளும் இந்தியாவுக்கு தப்பி ஓடிவந்தார். ஒடிஷாவிலும் ராஜஸ்தானிலும் தலைமறைவாக இருந்து வந்த வரதராஜ பெருமாள் பின்னர் டெல்லியில் தங்கி இருந்தார்.

தலைமறைவு வாழ்க்கை
ஆனாலும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி அவர் பேசுவதே இல்லை.அவரை யாரும் கண்டு கொள்வதாகவும் இல்லை என்ற நிலை இருந்து வந்தது.

கோவையில் பிரஸ்மீட்
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த வரதராஜப் பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக மீனவர் பிரச்சினையை பொறுத்தமட்டில் இரு அரசுகளும் சுமுகமான முறையில் ஓப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் இருநாட்டு கடல் பகுதிகளில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்.

பழைய மீன்பிடி முறை
ஆழப்பகுதியில் விசைப்படகு மூலம் மீன் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. எனவே பழைய மீன்பிடி முறையை இருதரப்பினரும் அமல்படுத்த வேண்டும். இலங்கையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தை பொறுத்த மட்டில் இலங்கை அரசு 13வது சட்ட திருத்தத்தை தவறான முறையில் நிறைவேற்றியுள்ளது.

மாகாணங்கள் இணைப்பு
இரு மாகாணத்தை சேர்ந்த மக்கள் குரல் கொடுத்தால் மட்டுமே ஒரே மாகாணமாக இணைந்து வளர்ச்சியை அடைய முடியும். அப்பொழுதுதான் தமிழர்கள் இலங்கையில் பயமின்றி வாழ முடியும்.
இவ்வாறு வரதராஜ பெருமாள் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications