சென்னை மக்களுக்காக மோடி தொகுதியில் சிறப்பு ஹோமம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நலனுக்காக பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் மக்கள் ஹோமம் வளர்த்துள்ளனர்.
வரலாறு காணாத மழையால் சென்னை வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது. சென்னை மக்களால் இந்த டிசம்பர் மாதத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு பாவம் படாதபாடு பட்டு வருகிறார்கள்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களின் நலனுக்காக பெங்களூரில் உள்ள விநாயகர் கோவிலில் ஹோமம் வளர்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மக்களுக்காக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மக்கள் ஹோமம் வளர்த்து பிரார்த்தனை செய்துள்ளனர்.
Locals in Varanasi hold special yajna, pray for relief for #ChennaiFloods victims (4.12.15) pic.twitter.com/x5SRSoXPPc
— ANI (@ANI_news) December 5, 2015 உடைமைகளை வெள்ளத்தில் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் சென்னைவாசிகளுக்காக பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை மக்களை அனுப்பி வருகிறார்கள்.
மேலும் பலர் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவோரின் அறக்கட்டளைகளுக்கு பணம் அனுப்பி வைத்தும் உதவி செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications