சென்னையையும் மிரட்டும் "வர்தா".. எண்ணூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வர்தா புயல் நெருங்கி வருவதால் சென்னை துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயல் நாளை தெற்கு ஆந்திரா மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்க உள்ளதால், எண்ணூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 450 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் வர்தா புயல், நாளை தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை அருகே கரையை கடக்க உள்ளது. இதனால், சென்னையை அடுத்த எண்ணூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து அதிக பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், வட தமிழக கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications