விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு: திருமாவளவன்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
விருப்ப மனுக்களை பெற்று வருகிறோம். ஞாயிற்றுக்கிழமையும் விருப்பமனு பெறப்படும். போட்டியிட ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். விருப்பமனு பெறுகிற அதேவேளையில் நேர்காணலும் நடக்கும். கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து நாளை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
இதனிடையே அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டார். அதில் மதிமுக வேட்பாளர்கள் 27 தொகுதிகளிலும், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியும், தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நாகை திருவள்ளுவனும் பம்பரம் சின்னத்தில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.