நீட், அனிதா அறிவுக்கூர்மையை அவமானப்படுத்தி தற்கொலை செய்ய வைத்தது - தொல். திருமா குற்றச்சாட்டு!
அதிக மதிப்பெண் எடுத்த அனிதாவின் அறிவுக்கூர்மையை, நீட் தேர்வு அவமானப்படுத்தி தற்கொலை செய்ய வைத்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: நீட் தேர்வு அனிதாவின் அறிவு கூர்மையை அவமானப்படுத்திய மன அழுத்தம்தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பிளாஸ் டூவில் 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவின் புத்திசாலித்தனத்தை நீட் தேர்வு கேள்விக்குள்ளாக்கியது.

நீட் தேர்வு அவருடைய அறிவுக்கூர்மையை அவமானப்படுத்திய காரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தமே அவர் தற்கொலை செய்ய காரணம்.
ஆனால், மத்திய அரசிடம் போராடி, தமிழக அரசு நீட் தேர்த்வை எப்படியாவது ரத்துச் செய்துவிடும் என அனிதா போன்ற பலர் நம்பினார்கள் என தொல்.திருமாவளாவன் பேசினார். ஆனால் மத்திய மாநில அரசுகள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டன என்றும் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications