ஜெ. உடல்நல விவகாரத்தில் மத்திய அரசும் உடந்தையா? தொல். திருமா கேள்வி
ஜெயலலிதா உடல்நல விவகாரத்தில் மத்திய அரசும் உண்மைகளை மறைத்துள்ளதா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெ. உடல்நல விவகாரத்தில் மத்திய அரசும் உடந்தையாக இருந்ததா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எப்படி இருந்தது என்ற மருத்துவ அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது மத்திய அரசின் சார்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் வந்தார்கள். விசாரணை ஆணையம் அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் சார்பில் அப்போதைய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்ததாகக் கூறினார்கள்.
அவர்கள் ஏன் ஜெயலலிதா உடல்நிலை எப்படி இருந்தது என கூறவில்லை. அப்படியென்றால் ஜெயலலிதா உடல்நல விவகாரத்தில் மத்திய அரசும் உடந்தையா என தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications