காவிரி: திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை- ஸ்டாலினுக்கு திருமா கடிதம்!

காவிரி பிரச்சனைக்கான திமுகவின் இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி பிரச்சனைக்காக திமுக இன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடிதம் அனுப்பியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் தமிழக அரசு இதை ஏற்கவில்லை.

இதனால் பிரதான எதிர்க்கட்சியான திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் திமுகவின் தோழமைக் கட்சிகளின் கூட்டம்; நரித்தனமாக செயல்படுகிறது. ஆகையால் மக்கள் நலக் கூட்டணி இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கிறது என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்திருந்தார்.

மீண்டும் ஆலோசனை

மீண்டும் ஆலோசனை

இதனிடையே சென்னையில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் நிலைப்பாடு என மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தோம்; ஆகையால் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுடன் மீண்டும் ஆலோசிப்போம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முத்தரசனும் தயக்கம்

முத்தரசனும் தயக்கம்

அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாட்டை கண்டுகொள்ளாமல் வைகோ தன்னிச்சையாக 'புறக்கணிக்கும்' என அறிவித்துவிட்டார் என இத்தீர்மானம் மறைமுகமாக சுட்டிக்காட்டியது. இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

வைகோவுடன் சந்திப்பு

வைகோவுடன் சந்திப்பு

மதிமுக பொதுச்செயலர் வைகோவையும் நேற்று இரவு அவரது வீட்டில் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

பங்கேற்பு இல்லை- திருமா கடிதம்

பங்கேற்பு இல்லை- திருமா கடிதம்

இதனிடையே இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+