ஜெயலலிதா உடல் நிலை குறித்து தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை - திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் திருமாவளவன். அப்போது அவர் கூறுகையில், ‘முதல்வரின் உடல் நலம் குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். முதல்வரின் உடல் நலத்தை தெரிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது.

சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்க வேண்டும். இதற்காக இலங்கைக்கு எதிராக இரண்டு லட்சம் கையெழுத்துக்களை திரட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முயற்சி எடுத்துள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்' என்று தெரிவித்தார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications