பறவைகள் இல்லாத சரணாலயமாக மாறிய வேடந்தாங்கல்

சென்னையில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயத்துக்கு உள்நாட்டில் இருந்து வரும் பறவைகளை தவிர்த்து, பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 16 வகையான பறவைகள் வருகின்றன.
இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால் ஏரியில் பாதியளவு நீர் கூட நிரம்பவில்லையாம்.
தண்ணீர் இல்லாததால் பறவைகளின் வருகை குறைந்து போய் தற்போது பறவைகள் முற்றிலும் இல்லாமல் சரணாலயம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பறவைகளை பார்க்க வேடந்தாங்கலுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குடும்பத்தோடு சுற்றுலா பயணிகள் வருவார்கள். பறவைகள் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.
இதையடுத்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் கே.எஸ்.வி.டி. ரெட்டி, வன உயிரின காப்பாளர் கீதாஞ்சலி ஆகியோரின் உத்தரவின் பேரில் நேற்றுடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது. மூடப்பட்ட சரணாலயம் நவம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications