ஓபிஎஸ் டீமிலிருந்து நழுவி சசிகலா அணியில் போய் விழுந்த "வீணை"!
ஓபிஎஸ் அணியிலிருந்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் திடீரென விலகியுள்ளனர்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி வீணை காயத்ரி சசிகலா அணியில் சேர்ந்துள்ளார். முக்கிய நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்தது. இதில் அதிமுகவைச் சேர்ந்த 12 எம்பிக்கள் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்துள்ளனர்.

அவர்கள் சசிகலா குடும்பத்தினரிடமிருந்து எப்படியாவது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்றும் இரட்டை இலையை கைப்பற்றியாக வேண்டும் என்றும் தீவிரமாக உள்ளனர். மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம் என்றும் சூளுரைத்துள்ளனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்து வீணை காய்த்ரி விலகியுள்ளார். அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் சசிகலாவால் அறிவிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவர் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இவர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது நினைவிடம் அருகே வீணை மீட்டி அஞ்சலி செலுத்தினார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
இதேபோல் நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா, கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோரும் இன்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications