ஓபிஎஸ் டீமிலிருந்து நழுவி சசிகலா அணியில் போய் விழுந்த "வீணை"!
ஓபிஎஸ் அணியிலிருந்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் திடீரென விலகியுள்ளனர்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி வீணை காயத்ரி சசிகலா அணியில் சேர்ந்துள்ளார். முக்கிய நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்தது. இதில் அதிமுகவைச் சேர்ந்த 12 எம்பிக்கள் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்துள்ளனர்.
அவர்கள் சசிகலா குடும்பத்தினரிடமிருந்து எப்படியாவது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்றும் இரட்டை இலையை கைப்பற்றியாக வேண்டும் என்றும் தீவிரமாக உள்ளனர். மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம் என்றும் சூளுரைத்துள்ளனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்து வீணை காய்த்ரி விலகியுள்ளார். அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் சசிகலாவால் அறிவிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவர் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இவர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது நினைவிடம் அருகே வீணை மீட்டி அஞ்சலி செலுத்தினார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
இதேபோல் நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா, கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோரும் இன்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.