தென்இந்திய மக்களை கறுப்பர் எனக் கூறுவதா?தருண் விஜயை கண்டித்து ஏப்.14-ல் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
தருண் விஜயை கண்டித்து ஏப்ரல் 14 ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தென் இந்திய மக்களை கறுப்பர்கள் என்று அடையாளம் காட்டும் வகையில் தெரிவித்துள்ள கருத்தினை எதிர்த்து வரும் 14 ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பி.ஜே.பி. பிரமுகரும், ஆர்.எஸ்.எஸ். இதழான பஞ்சான்யாவின் மேனாள் ஆசிரியருமான தருண்விஜய் - டெல்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி இந்தியாவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது.

இந்தியர்கள் இன வெறியர்கள் அல்ல; நாங்கள் இனவெறியர்களாக இருந்தால், கறுப்பர்களாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ முடியும்? என்று கூறியுள்ளார்.
இது நாடாளுமன்றம்வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. சமூக வலைதளங்களிலும் அனல் பறக்கும் நிலையை உருவாக்கிவிட்டது.
தென்னாடு பிரியும்!மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே நறுக்கென்றும், சுருக்கென்றும் ஒரு கேள்வியை எழுப்பினார். தென்னிந்தியாவில் வாழக்கூடிய நாங்கள் எல்லாம் இந்தியர்களா? இல்லையா? என்ற கேள்வியோடு நிறுத்திடவில்லை; இம்மாதிரியான பேச்சுகளைப் பி.ஜே.பி. அனுமதித்தால், தென்னாடு தனியாகப் பிரியும் நிலை ஏற்படும் என்று அனல் கக்கப் பேசியுள்ளார். அவரது பேச்சுக்குப் பெரும் ஆதரவும் இருந்தது. அவை மூன்றுமுறை ஒத்தி வைக்கவும்பட்டது.
நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்லக்கூடிய தேசியத் திலகங்கள், பி.ஜே.பி., சங் பரிவார்க் கூட்டத்தினர் தருண்விஜய் கருத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகின்றனர்? தருண் விஜய் பேச்சைக் கண்டித்து பி.ஜே.பி. தரப்பில் இதுவரை ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் வடநாடு - தென்னாடு, ஆரியர் - திராவிடர் என்ற வேறுபாட்டை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அவர்களின் மனதில் உள்ளதுதான் இப்படியொரு கருத்தாக வெளிவந்துள்ளது என்பது விளங்கிடவில்லையா?
தருண்விஜய் வேடம் கலைந்தது. ஒப்பனை இல்லா உண்மை உருவம் உலா வருகிறது இதன்மூலம்! திராவிடர்களே, புரிந்துகொள்ளுங்கள் - உழைப்பவர் கறுப்பாக இல்லாமல் எப்படி மஞ்சளாக இருக்க முடியும்? ஜாதி, மத உணர்வுள்ளவர்கள் சிந்தனை என்பது இப்படி எவரையும் பிரித்துப் பார்க்கும், பேதப்படுத்திப் பார்க்கும் தன்மை கொண்டதுதான் என்பதற்குத் தருண் விஜய் பேச்சே உதாரணமாகும்.
இதனைக் கண்டிக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications