வீரப்பனின் அண்ணன் ”மீசை” மாதையனுக்கு உடல்நலக் குறைவு – மருத்துவமனையில் அனுமதி
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் உடல் நலக் குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், கருமலைக் கூடல் பகுதியில் வசித்து வரும் மீசை மாதையன். இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.
வீரப்பனுடன் சேர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும், சத்தியமங்கலம் வன அலுவலர் சிதம்பரம் என்பவரை கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஒரு வழக்கில் இவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு சனிக்கிழமை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை நீர்கோர்ப்பு காரணமாகவும் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதை அறிந்த சிறை அதிகாரிகள், மாதையனை சேலம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனர்.
இங்குள்ள "ஸ்டிராங்" அறையில் மாதையனுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications