தொடர் மழையால் கோயம்பேட்டிற்கு காய்கறி வரத்து குறைந்தது... விலை 2 மடங்கு எகிறியது
சென்னை: தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை எகிறியுள்ளது. 4 நாட்களுக்கு முன்பு ரூ.30-க்கு விற்ற தக்காளி தற்போது 2 மடங்கு உயர்ந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது.
சென்னை மாநகர மக்களின் காய்கறி தேவைக்கு, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விளைந்த காய்களை பறித்து விற்பனைக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வயல்களில் வெள்ளநீர் தேங்கியதால் காய்கறிகள் மூழ்கி அழுகி வீணாகியுள்ளன.
இதனால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. தினமும் 250 லாரிகள் வந்த இடத்தில் தற்போது 100 லாரிகள் மட்டுமே வருகிறது. இதனால், காய்கறிகளின் விலை 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான வியாபாரிகளும், பொதுமக்களும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வர முடியாமல் போனது. இதனால் காய்கறிகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. தக்காளி ஒரு நாளைக்கு 70 லாரிகளில் வந்திறங்கும் தக்காளி தற்போது 30 லாரிகளில் மட்டுமே வரத்து உள்ளது. இதனால், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.30-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.80 ஆக விலை உயர்ந்துள்ளது.
அதேபோல, காய்கறிகளின் விலையும் கடுமையாக அதிகரித்து உள்ளது. அவைகளின் விலை (ஒரு கிலோ) கீழே கொடுக்கப்பட்டுள்ளது ( 4 நாட்களுக்கு முன்பு இருந்த விலை அடைப்புகுறிக்குள் காட்டப்பட்டுள்ளது ):
பீன்ஸ் - ரூ.60 (ரூ.30). கேரட் - ரூ.50 (ரூ.30). நூக்கல் - ரூ.40 (ரூ.20). சவ்சவ் - ரூ.30 (ரூ.15). பீட்ரூட் - ரூ.30 (ரூ.20). முட்டைக்கோஸ் - ரூ.15 (ரூ.10). பச்சை மிளகாய் - ரூ.25 (ரூ.20). கத்தரிக்காய் - ரூ.40 (ரூ.20). முருங்கைக்காய் - ரூ.60 (ரூ.40). வெண்டைக்காய் - ரூ.30 (ரூ.20). பல்லாரி வெங்காயம் - ரூ.50 (ரூ.30). சாம்பார் வெங்காயம் - ரூ.50 (ரூ.40). காலிபிளவர் (ஒரு எண்ணிக்கை)- ரூ.30 (ரூ.20). புடலங்காய் - ரூ.25 (ரூ.20). உருளைக்கிழங்கு - ரூ.20 (ரூ.13).
இந்நிலையில், தென் மாவட்டங்களில் பயிரிடப்பட்ட வாழைகள், தொடர் மழை காரணமாக அதிக அளவில் முறிந்துவிழுந்தன. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவை வருகின்றன. இதன் காரணமாக அவற்றின் விலை குறைந்துள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு விற்பனையானது. தற்போது ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ரூ.50-க்கு விற்பனையான பெரிய வாழைத்தண்டு ரூ.30 ஆகவும், ரூ.20-க்கு விற்பனையான வாழைப்பூ ரூ.10 ஆகவும் விலை சரிந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications