உடனே பல்டியா?.. வேலூர் எம்பி செங்குட்டுவன் தினகரனுடன் திடீர் சந்திப்பு!
வேலூர் எம்பி செங்குட்டுவன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: வேலூர் எம்பி செங்குட்டுவன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். இதில் அதிமுக திமுகவை பின்னுக்கு தள்ளி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
சென்னை பெசன்ட்நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில், ஆதரவாளர்களும் அரசியல் கட்சியினரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் எம்பி செங்குட்டுவன் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தினகரன் ஆதரவாளரான வேலூர் எம்பி செங்குட்டுவன் கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இரட்டை இலை சின்னத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல்வர் அணியுடன் இணைந்ததாக அப்போது கூறினார்.
இந்நிலையில் செங்குட்டுவன் மீண்டும் டிடிவி தினகரனை சந்தித்துள்ளார். இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.