செல்போன் பேசிய டிரைவர்.. டீக்கடைக்குள் பாய்ந்த கார்.. பெண் பலி, 4 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

டீக்கடைக்குள் பாய்ந்த கார்.. பெண் பலி, 4 பேர் படுகாயம்
சென்னை: ராணிப்பேட்டை அருகே தேனீர் கடைக்குள் கார் விபத்தில் ஒரு பெண் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே தோல்பேட்டை என்ற பகுதியில் ரோட்டோர கடை ஒன்றில் கார் வேகமாக புகுந்துள்ளது. இதில் டீக்கடையிலிருந்த ராணி என்ற பெண் பலியானார்.

படுகாயமடைந்த மேலும் நால்வர் மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில், காரை ஓட்டிச் சென்ற சீனிவாஸ் செல்போனில் பேசியபடியே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தேனீர் கடைக்குள் புகுந்து விட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலதிக தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications