மீத்தேன், பாறை எரிவாயுவைத் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டம்.. பாஜகவிற்கு வேல்முருகன் கண்டனம்
மீத்தேன், பாறை எரிவாயுவைத் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய பாஜக அரசுக்கு வேல்முருகன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை: கெய்ட் எரிவாயு திட்டம், மீத்தேன் திட்டம் என ஏதாவது ஒரு பெயரில் தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி நடைபெற்று வருகிறது. தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வர மத்தியில் ஆளும் பாஜக அரசு முயன்று வருகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக விளைநிலங்களை பாலைவனமாக்கும் படுபாதக செயலில் இந்திய மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
கர்நாடகத்தின் வஞ்சகத்தாலும் இந்திய மத்திய அரசின் துரோகத்தாலும் காவிரி நீர் கிடைக்காமல் காவிரி டெல்டா பாசன பகுதிகள் பாலைவனமாகிவிட்டன. 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு போயுள்ளனர்.
இந்த நிலையில் மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் போன்றவற்றை காவிரி பாசன பகுதிகளில் திணித்து ஒட்டுமொத்த விளைநிலத்தையும் பாழ்படுத்தும் படுபாதக சதிச் செயலை தொடர்ந்து திணிக்கிறது இந்திய மத்திய அரசு. காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் பாறைஎரிவாயு எடுக்கும் திட்டங்களுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கடுமையாக எதிர்த்தது. தமிழக அரசும் கடுமையாக எதிர்த்தது. இதனால் மத்திய அரசு பின்வாங்குவதாக அறிவித்தது.
ஆனால் இந்த மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்ற பெயரில் புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மீத்தேன், பாறை எரிவாயு, கெயில், நியூட்ரினோ என தமிழகத்தை நாசமாக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எந்த ஒரு பெயரில் நடைமுறைப்படுத்த முயற்சித்தாலும் தமிழகம் ஒட்டுமொத்தமாக கிளர்ந்தெழுந்து இவற்றை தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications