தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தடியடி... இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரும் வேல்முருகன்
சென்னை: நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் குளிர்பான ஆலைகள் வெளியேறக் கோரி அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்திய இன்ஸ்பெக்டர் சிவமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை அருகே கோககோலா, பெப்சி குளிர்பான ஆலைகள் அமைவதை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். அதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்ளிட்ட 500 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆனால், அமைதியாக போராடிய தங்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குளிர்பான ஆலைகள்...
திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோககோலா, பெப்சி ஆலைகள் தாமிபரணி நீரை இந்த உறிஞ்சி எடுப்பதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

போராட்டம்...
ஆகையால் இந்த பன்னாட்டு பகாசுர ஆலைகளை வெளியேற்றக் கோரி நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இன்று (அக்டோபர் 27) என் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை அமைதி வழியில் நடத்திக் கொண்டிருந்தோம்.

குடிபோதையில் தடியடி...
ஆனால் கோககோலா, பெப்சி ஆலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கங்கைகொண்டான் காவல்துறை இன்ஸ்பெக்டர் சிவமுருகன் என்பவர் பணியில் குடிபோதையில் இருந்தபடியே திடீரென காட்டுமிராண்டித்தனமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது கொடூரமாக தடியடி தாக்குதலை நடத்தினார்.

படுகாயம்...
இதில் 10க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை தேவை...
அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தடியடி நடத்தி பன்னாட்டு ஆலைகளால் ஏவிவிடப்பட்ட ரவுடி போல நடந்து கொண்ட கங்கை கொண்டான் இன்ஸ்பெக்டர் சிவமுருகன் மீது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது...
இந்நிலையில், நெல்லையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீதான தடியடியைக் கண்டித்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications