வேல்முருகனுக்கு பதவி வழங்க ஜெயலலிதா திட்டம்?
சென்னை: அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு கவுரவமான பதவி கொடுக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, மதிமுக, பாமக, இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இதில் அதிமுகவின் பரம எதிரியான பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் சார்பில் வட மாவட்டங்களில் அதிக அளவு வேட்பாளர்களை களம் இறக்கினார்கள். ஆனால் இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புணி ராமதாஸ் மட்டுமே வெற்றிக் கனியை பறித்தார். மற்றவர்கள் மிக மோசமான தோல்வியை தழுவினர்.
இந்த நிலையில் வட மாவட்டங்களில் பாமகவை அடியோடு சாய்த்தது, அதிமுகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தது, ஈழத் தமிழர்கள் விவகாரத்தை கையாண்ட விதம், அதிமுக தலைமையுடன் நடந்து கொள்ளும் விதம், மேடைகளில் முதல்வர் குறித்து மக்கள் ரசிக்கும்படி பேசுவது என பல பிளஸ் பாயிண்ட்கள் வேல்முருகனிடம் உள்ளது என உளவுத்தறை நோட் போட்டதாம்.
மேலும், தேர்தல் வெற்றிக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் வேல்முருகன் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 20ம் தேதி சந்தித்தார்.
இந்நிலையில் வேல்முருகனுக்கு கவுரவமான பதவி கொடுக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications