புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன்.. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் அமைதியாக நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இன்னும் பலர் மோசமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட, போலீஸ் தாக்கிய மக்களை நேரில் சந்திக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றார். அங்கு அவர் போலீசால் கைது செய்யப்பட்டு மறுநாள் திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து வேல்முருகன், சென்னை புழல் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். கடந்த நான்கு நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தண்ணீர் கூட குடிக்காமல் அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
இதனால் அவர் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இன்று காலை மதிமுக பொதுச்செயலர் வைகோ அவரை நேரில் சந்தித்து, உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் வாங்கும்படி கூறினார். வைகோ கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் தனது நான்கு நாள் போராட்டத்தை வாபஸ் வாங்கினார்.
ஆனாலும் நான்கு நாள் உண்ணாவிரத போராட்டம் இருந்த காரணத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இன்று உடல்நிலை மோசமான வேல்முருகன், தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரதம் காரணமாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications