Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.. எச்சரிக்கும் வேல்முருகன்

என்எல்சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: என்எல்சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தங்களின் உரிமை போர் தொடரும் என அவர் தெரிவித்தார்.

Velmurugan has warned that Not only NLC, NLC officials house will be siege

ஏப்ரல் 10ஆம் தேதி அனைவரையும் ஒருங்கிணைத்து என்எல்சி யை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கட்சியை தவிர அனைத்து கட்சியினரும் காவிரிக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

என்எல்சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் வேல்முருகன் எச்சரித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டை நடத்த விடமாட்டோம் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் விளையாட்டை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+