வேங்கைவயல் குற்றவாளி யார்? டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி முடிவு!
புதுக்கோட்டை : வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சந்தேகத்திற்கிடமான 11 பேரிடம் டிஎன்ஏ டெஸ்ட் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், ரத்த மாதிரி கொடுக்க 8 பேர் மறுப்பு தெரிவித்தனர். 3 பேர் மட்டுமே ரத்த மாதிரி கொடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 8 பேரும் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
வேங்கைவயல் கொடூரம் : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை கலந்தனர். அந்த ஓவர் டேங்க்கில் இருந்து வரும் குடிநீரை குடித்தவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, அந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
டிஎன்ஏ பரிசோதனை : இந்த விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதையடுத்து நீதிமன்றம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி வழங்கியது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்ட 11 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க, ஏப்ரல் 25ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. பயிற்சி காவலர் முரளி ராஜா, இறையூர் மற்றும் கீழ முத்துக்காட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் என மூவர் மட்டுமே இன்று டிஎன்ஏ பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகினர்.
சிபிசிஐடி அதிரடி : அவர்களிடம் மட்டும் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மற்ற எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், டி.என்.ஏ பரிசோதனைக்கு வர மறுத்த எட்டு பேருக்கும், பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என நீதிமன்ற அனுமதியுடன் சிபிசிஐடி காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications