For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Very heavy rain to Tamilnadu and Puducherry says IMD

மேலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது. மும்பை நகரமே வெள்ளக்காடாகி மிதக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழை கொட்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் குடகு, ஹாசன், மைசூரு மாவட்டங்களிலும் கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனமழையால் காவிரி, பவானி, மோயார் ஆறுகளில் நீர் வரத்து அதிகம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
India Meteorological Department announced very heavy rainfall to Tamil Nadu and Puducherry next 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X