வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது. மும்பை நகரமே வெள்ளக்காடாகி மிதக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழை கொட்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் குடகு, ஹாசன், மைசூரு மாவட்டங்களிலும் கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனமழையால் காவிரி, பவானி, மோயார் ஆறுகளில் நீர் வரத்து அதிகம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications