விஎச்பியும், பிற கட்சிகளுமே பிரச்சினைக்குக் காரணம்.. வைரமுத்து வக்கீல் பொளேர்
வைரமுத்து கூறியதை விஹெச்பியும் அரசியல் கட்சிகளும்தான் பெரிதாக்கியதாக வைரமுத்துவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
சென்னை: வைரமுத்து கூறியதை விஹெச்பியும் அரசியல் கட்சிகளும்தான் பெரிதாக்கியதாக வைரமுத்துவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது கொளத்தூர், சிந்தாதரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைரமுத்து தரப்பில் சரமாரியான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. அமெரிக்கா ஆராய்ச்சியாளர் கட்டுரையைதான் வைரமுத்து சுட்டிக்காட்டியதாக வைரமுத்துவின் வழக்கறிஞர் கூறினார்.
மேலும் ஆண்டாள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க போராடினார் என்றே வைரமுத்து பேசினார் என்றும் வைரமுத்துவின் வக்கீல் தெரிவித்தார். ஆராய்ச்சியாளரின் கட்டுரைக்கு அரசியல் கட்சிகள் குற்றச்சாயம் பூசுவதாகவும் வைரமுத்து தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
விஹெச்பி மற்றும் அரசியல் கட்சிகளே இந்த விவகாரத்தை பெரிதாக்கி உள்ளன என்றும் வைரமுத்துவின் வக்கீல் குற்றம் சாட்டினார். வைரமுத்து கூறியது அவரது சொந்தக் கருத்து அல்ல என்றும் வைரமுத்துவின் வக்கீல் நீண்ட வாதத்தை முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications