ஊராட்சி துணைத்தலைவர் கொலை வழக்கு - ஐவர் சரண்
செங்கோட்டை: நெல்லை அருகே ஊராட்சி துணைத்தலைவர் கொலை வழக்கில் 5 பேர் செங்கோட்டை நீதிமன்றத்தில் இன்று சரண அடைந்தனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவருடைய மகன் பாலமுருகன் (வயது 38). இவர் மேலப்பாட்டம் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வந்தார். திங்கட்கிழமையன்று மதியம் பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அங்குள்ள ஒரு கடையில் புரோட்டா வாங்கிக் கொண்டு வீடு நோக்கி புறப்பட்டார்.
பாளையங்கோட்டை - சீவலப்பேரி ரோட்டில் உள்ள நகர கூட்டுறவு வங்கி முன்பு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் திடீரென வந்து பாலமுருகனை வழிமறித்தது. அந்த கும்பலை பார்த்ததும் கூட்டுறவு வங்கி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அந்த கும்பல் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மோட்டார் சைக்கிளில் இருந்த பாலமுருகனை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றார்கள்.
பட்டப்பகலில் படுகொலை
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். வாகனங்களில் வந்தவர்களும் வேறுவழியாக சென்றார்கள். இக்கொலைத் தொடர்பாக நெல்லை மாநகர போலீசார் 18பேர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைதேடி வந்தனர்.
10 பேர் மீது வழக்கு பதிவு
இந்த கொலை தொடர்பாக மேலப்பாட்டத்தை சேர்ந்த கருத்தப்பாண்டி, கண்ணன், ஆசைத்தம்பி, பொன்முத்துராஜ், சுரேஷ், செந்தில், சிவா, பழனி, அருண், சுந்தர்சிங் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் தேடிவந்தனர்.
5 பேர் சரண்டர்
இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய மேலப்பாட்டத்தை பொன் முத்துராஜ், குட்டி சுரேஷ்,ஆசைத்தம்பி,பழனி செல்வம் ஆகிய ஐவரும் இன்று செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் 5 பேரையும் நீதிபதி மாதவராமானுஜம் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications