சென்னையில் பைரவா சிறப்பு காட்சி.. நள்ளிரவில் ரசிகர்கள் கொண்டாட்டம் !
சென்னை: நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் நள்ளிரவு காட்சியாக திரையிடப்பட்டது.
அழகிய தமிழ்மகன் இயக்குநர் பரதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ள படம் பைரவா. இப் படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, 'ஆடுகளம்' நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ள பைரவா படம் இன்று உலகம் முழுவதும் ரலீஸாகிறது.
இதனிடையே, ரசிகர்களுக்காக பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. நள்ளிரவு ஒரு மணிக்கு இந்த காட்சி திரையிடப்பட்டது. அப்போது தியேட்டர் முன்பு கூடியிருந்த விஜய் ரசிகர்கள் விஜய் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர். இதேபோல் திருச்சி, மதுரையிலும் அதிகாலை சிறப்பு காட்சியாக பைரவாக திரையிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications