மகன்களுடன் சேர்ந்து சரவெடி வெடித்து தீபாவளியைக் கொண்டாடிய விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது குடும்பத்தாருடன் சேர்ந்து பட்டாசு வெடித்து பட்டையைக் கிளப்பி விட்டார்.
சென்னையில் உள்ள தனது வீட்டில் தீபாவளியை புத்தாடை அணிந்து கொண்டாடினார் விஜயகாந்த். இந்தக் கொண்டாட்டம் உள்ளே இனிப்பு, புத்தாடை மற்றும் வெளியில் பட்டாசு வெடிப்பு என களை கட்டியிருந்தது.

தனது வீட்டுக்கு வெளியே மகன்கள், குடும்பத்தாருடன் வந்த விஜயகாந்த் சற்றும் பயப்படாமல் பல்வேறு வகையான சர வெடிகளை கொளுத்திக் கலக்கினார்.
மகன் பிரபாகரன், சண்முகப்பாண்டியன் ஆகியோர் பெரிய சைஸ் சரவெடிகளை தரையில் உருட்டி பரப்பி வைத்தனர். பின்னர் விஜயகாந்த் திரியைப்ப பற்ற வைத்து வெடிக்க வைத்தார். சில வெடிகளை அவர் வெடிக்க மறற வெடிகளை மகன்களும், உறவினர்களும் வெடித்து மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications