தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை… உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா? விஜயகாந்த் கேள்வி
சென்னை: தமிழகத்தில் தினமும் கொலை கொள்ளை நடந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டலத்தில் வசித்து வந்த தேமுதிக பிரமுகர் சசிகுமாரின் வீட்டில் கடந்த வெள்ளிக் கிழமை நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் அவரது வீட்டில் மர்ம நபர்கள் வெடிகுண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர். இரண்டாவது முறையாக சசிகுமார் குறிவைத்து தாக்கப்படுவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஸ்ரீபெரும்புதூர் சசிகுமார் வீட்டில் வெடிகுண்டு வீசியது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில் 2 கவுன்சிலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழக மக்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாள் தோறும், கொலை, கொள்ளை, நகைப்பறிப்பு போன்ற தொடர் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. அவர்களுக்கு முறையான பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. இதுபோன்று அசாதாரண சூழல் தமிழகத்தில் நிலவி வருவதால் உள்ளாட்சித் தேர்தலே முறையாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications