மட்டன், சிக்கன் பிரியாணி குறித்து சிலாகித்து விவரித்த விஜயகாந்த்!
அதிமுக அணியினருக்கு தங்களுக்குள் சண்டையிடுவதற்கு தான் நேரம் சரியாக உள்ளது என விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணம் மத்திய அரசு தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த பக்ரீத் விழாவில் குர்பானி விருந்தளித்தார் விஜயகாந்த். விழாவில் பேசிய விஜயகாந்த், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணியின் சுவையை பற்றி பேசினார். ஆண்டுதோறும் பக்ரீத் விழாவில் சுவையான பிரியாணி விருந்து தருவதைப் பற்றி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனிதா தற்கொலை சம்பவத்திற்கு வந்தார். அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணம் மத்திய அரசு தான் என்று குற்றம் சாட்டினார்.
அதிமுக அணியினருக்கு தங்களுக்குள் சண்டையிடுவதற்கு தான் நேரம் சரியாக உள்ளது என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications