விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி... நலமுடன் இருப்பதாக தேமுதிக தகவல்
Recommended Video
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக கட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூச்சுத்திணறல் காரணமாக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆனால் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நாளை அவர் வீடு திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
[அன்பானவர்.. அசராதவர்.. அடங்காதவர்.. மீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த்!]
இந்த நிலையில் தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
[நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் விஜயகாந்த் தான் பெஸ்ட்-வீடியோ]
சமீபத்தில்தான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று விட்டு விஜயகாந்த் சென்னை திரும்பியிருந்தார். மீண்டும் அவர் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கூறி வந்தன. இந்த நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.