'ரோபாவாக' விஜயகாந்த் உருமாறிய வீடியோ- கிள்ளுகீரையான தொண்டர்கள்!
கட்சி கூட்டத்தில் தொண்டர்களுடன் எதுவும் பேசாமல் ரோபோ போல் அமர்ந்து அமைதியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இது தொண்டர்களிடையே கடும் ஏமாற்றத்தை உண்டாக்கியது.
விழுப்புரம்: தேமுதிக தலைவர் 'உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தொண்டர்களுடன் விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ஆனால் அப்போது அவர் தொண்டர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இது தேமுதிக தொண்டர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் ஒவ்வொரு ஊரிலும் சென்று சந்தித்து வருகிறார். 'உங்களுடன் நான்' என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த், தொண்டர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு, முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் ரோபோவைப் போல அமர்ந்திருக்கிறார்.
தொண்டர்கள் அவருக்கு அருகில் போடப்பட்டிருக்கும் நாற்கலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். விஜயகாந்தின் இந்த அமைதி தொண்டர்களிடையே 'என்னப்பா தலைவர் ஒரு வார்த்த கூட பேசல' என்கிற ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
-விஜயகாந்த்












Click it and Unblock the Notifications