தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருப்பாரா விஜயகாந்த்?- அன்புமணி ராமதாஸ் சந்தேகம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் முடிவில் உறுதியாக இருப்பாரா என்பது சந்தேகம்தான் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் நேற்று அறிவித்தார். அவரது மனைவி பிரேமலதாவோ, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளும் வந்து பேசலாம் என கூறி விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி, தே.மு.தி.க இதற்குமுன் நடைபெற்ற தேர்தல் காலகட்டங்களில் பலமுறை மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாருடனும் கிடையாது என்று கூறியது.
ஆனால் பின்னர் கட்சிகளுடன் கூட்டணி வைத்தனர். உதாரணமாக கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாநாட்டில் தனியாக போட்டியிடுவதாக கூறிவிட்டு பின்னர் பாஜகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்தார்.
இந்நிலையில், மீண்டும் இந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக தற்போது கூறிய இந்த முடிவில் அவர் உறுதியாக இருப்பாரா என்பது தான் எனது கேள்வி" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications