10ம் தேதி 'மாங்காயைத்' தேடி தைலாபுரம் தோட்டத்துக்குச் செல்கிறார் விஜயகாந்த்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தைலாபுரம் செல்கிறார். அங்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸைச் சந்திததுப் பேசுகிறார். சமரசம் ஆகிறார். இருவரும் இணைந்து பேட்டியும் கொடுக்கவுள்ளனர்.. இதுதான் பாமக மற்றும் தேமுதிக வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்.
ஏப்ரல் 10ம் தேதி இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. விழுப்புரம் தனித் தொகுதி வேட்பாளர் உமாசங்கரை ஆதரிததுப் பிரசாரம் செய்ய அன்று விழுப்புரம் வருகிறார் விஜயகாந்த். அப்போதுதான் தைலாபுரம் செல்கிறார். அன்புமணி ராமதாஸ் ஏற்பாட்டின்பேரில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாம். விஜயகாந்த்துடன் அவரது மனைவி பிரேமலதாவும் உடன் போவார் என்று தெரிகிறது.

கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டின்போது மிகவும் பிரச்சினையானது இந்த இரு கட்சிகளிடையேதான். இதில் தேமுதிக கை ஓங்கி, பாமக கை தாழ்ந்ததால் கடும் அதிருப்தி அடைந்தார் ராமதாஸ். உடனடியாக பிரசாரத்தை நிறுத்தினார். ராஜ்நாத் சிங் வந்தபோது கூட அவர் வரவில்லை. அப்செட்டாக இருந்து வநதார. உடல் நலன் சரியில்லை என்றும கூறப்பட்டது.
இந்த நிலையில் தேமுதிகவுடன் சமரசமாகப் போவதுதான் எதிர்காலத்துக்கு நல்லதுஎன்று அன்புமணி எடுத்துக் கூறி ராமதாஸை சமாதானப்படுத்தியுள்ளாராம். இதையடுத்தே விஜயகாந்த்தையும், தந்தையையும் சந்திக்க வைக்கிறார் அவர்.
ஒரு காலத்தில் விஜயகாநத்தை கடுமையாக சாடிப் பேசியவர் ராமதாஸ். குடிகார கட்சி, நடிகர் என்றெல்லாம் விஜயகாந்த்தையும், தேமுதிகவையும் சாடியவர் அவர். விஜயகாந்த் பெயரைக் கூட சொல்ல மாட்டார். அப்படிப்பட்ட ராமதாஸ், விஜயகாந்த்தைச் சந்திக்கும்போது அந்தக் காட்சி எப்படி இருக்கும என்பது கியூரியாசிட்டியை தூண்டி விடுவதாக உள்ளது.
ராமதாஸ், விஜயகாந்த் சந்திப்புக்குப் பின்னர் இருவருக்கும் இடையிலான இரும்புத் திரை அகன்று சகஜமாவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications