என்ன பண்ணலாம்?.. நாமக்கல்லில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: உங்களுடன் நான் என்ற தலைப்பில் மாவட்ட வாரியாக கட்சியினரை சந்தித்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாமக்கல்லில் கட்சியினருட் ஆலோசனை நடத்தினார்.

இன்று நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அவர்களிடம் கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த். நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முதலில் உங்களது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்சியில் சேருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

Vijayakanth meets party men at Namakkal

ஆலோசனையின்போது, தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உடன் இருந்தார்.

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரசாரம் செய்தவர் விஜயகாந்த். இவரது கட்சி பாஜக கூட்டணியில் அதிகபட்சமாக 14 தொகுதிகளில் போட்டியிட்டும் கூட ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.

சில கூட்டணிக் கட்சிகளின் உள்ளடி வேலை, மக்களிடையே தேமுதகவின் சீட் பேரம் உள்ளிட்டவை மீதான கடும் அதிருப்தி, விஜயகாந்த்தின் போக்கு குறித்து நிலவி வரும் அதிருப்தி, ஜெயலலிதா அலை விசியது, மோடி அலை கை கொடுக்காமல் போனது என பல காரணங்களால் தேமுதிக பலமான தோல்வியைத் தழுவியது.

இதையடுத்து அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து மாவட்ட வாரியாக கட்சியினருடன் கலந்து வருகிறார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+