For Daily Alerts
Just In
மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி திருவாரூரில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி திருவாரூரில் விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் ஜூன் 12-ந் தேதி அணை திறக்கப்படும்.
ஆனால் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. தற்போதுதான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான தே.மு.தி.கவினர் கலந்து கொண்டனர்.
Comments
English summary
DMDK chief Vijayakanth on Monday hedl protest to demand for release Cauvery water from Mettur dam for Kuruvai cultivation.
Story first published: Monday, June 29, 2015, 13:09 [IST]