‘தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு’.. தேமுதிக "லோகோ"வை வெளியிட்டார் விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காஞ்சிபுரத்தில் அடுத்தமாதம் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டிற்கான லோகோவை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
"தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு" என்ற பெயரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற அடுத்த மாதம் 20ம் தேதி, காஞ்சிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேடல் என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.

அந்த மாநாட்டிற்காக லோகோவினை இன்று, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்,
இந்நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த், கழக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ, கழக துணைச்செயலாளர்கள் பி.முருகேசன், ஆர்.உமாநாத், என்.ஜாகீர் உசேன், கழக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications