20 தமிழர் படுகொலை.... நாடே கொந்தளிக்க.... ரொம்ப..........லேட்டாக வாய்திறந்த விஜயகாந்த்!
சென்னை: ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பல மணிநேரம் கழித்து சடங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்ட ஒரே ஒரு தமிழக அரசியல் கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த்..
திருப்பதி அருகே இன்று அதிகாலை ஆந்திரா போலீசாரால் தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடே கொந்தளித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது தலைமையில் நெய்வேலியில் போராட்டம் நடத்தியிருக்கிறார். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் அவரது கட்சியினர் ஆந்திர பேருந்துகளை சிறைபிடித்தும் சந்திரபாபு நாயுடு கொடும்பாவி எரித்தும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதேபோல் தமிழர் முன்னேற்றப் படை, தமிழக முன்னேற்ற கழகம் போன்ற சிறிய இயக்கங்கள் கூட ஆந்திரா பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றன. காலையில் தொடங்கி இரவு வரை தமிழக ஊடகங்கள் அனைத்திலும் இதுவே பிரதான செய்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது..
ஆனால் இந்த ரணகளம் குறித்து எந்த கருத்துமே தெரிவிக்காமல் பகல் முழுவதும் அமைதி காத்த தமிழகத்தின் ஒரே அரசியல் கட்சித் தலைவர் விஜயகாந்த்...
காலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு அத்தனை தலைவர்களும் பதறிப் போய் அறிக்கை கொடுத்தால் இந்த "மக்கழே!" தலைவருக்கு என்ன "மயக்கமோ" மாலைதான் விடிந்தது போல..
மாலையில்தான் கண்டன அறிக்கையே கொடுக்கிறார்... இதில் இவருக்கு தமிழகத்தின் வருங்கால முதல்வரே என்கிற கனவு வேற...
நல்லாவே வெளங்கிடும் 'கேப்டன்' கட்சி....
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications