திமுக, அதிமுக இரண்டுமே குறுக்கு வழியில்தான் வெற்றி பெறுகின்றன.. விஜயகாந்த்
சென்னை: திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி யார் ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ, அவர்களே இடைத் தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள். குறுக்கு வழிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மாறி மாறி ஆளும் கட்சியாக உள்ளவர்கள் மீது வசை பாடுகிறார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுதொடர்பாக விஜயகாந்த் நீண்டதொரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக, அதிமுகவை விமர்சித்தும், சென்னையில் நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு குறித்தும் அவர் விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா புகழ்ந்து பேசக் கூடிய அளவுக்கு காவல்துறையின் செயல்பாடு இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்றும் விஜயகாந்த்
கூறியுள்ளார்.
மின்வெட்டுப் பிரச்சினை குறித்தும் அவர் முதல்வரையும், தமிழக அரசையும் சாடியுள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை...















Click it and Unblock the Notifications