எப்பப் பார்த்தாலும் என் கிட்டேயவா... கல்யாண வீட்டில் விஜயகாந்த் கடுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்று ஏன் என்னையே கேட்கிறீர்கள். போய் திமுகவிடம் கேளுங்கள். தேர்தலைப் புறக்கணித்துள்ள மற்ற கட்சிகளிடம் போய்க் கேளுங்களேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபமாக கேட்டுள்ளார்.

Vijayakanth slams opponents

தேமுதிக வர்த்தக அணியின் மாநிலச் செயலாளர் சந்திரன் இல்லத் திருமணத்தில் இன்று விஜயகாந்த் கலந்து கொண்டார். திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசுகையில், வழக்கம் போல நான் அரசியல் பேச வரவில்லை என்று கூறி விட்டு முழுக்க முழுக்க அரசியல் குறித்தே பேசினார்.

விஜயகாந்த் பேச்சிலிருந்து...

  • நானும், எனது மனைவியும் திருமணம் முடிந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். அதுபோல் வாழ வேண்டும்.
  • நான் அரசியல் பேச வரவில்லை. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி குறித்தே அத்தனை பேரும் கேட்கிறார்கள்.
  • தேமுதிக போட்டியிடுமா? பயமா என்றெல்லாம் கேட்கிறார்கள். எனக்கு பயம் இல்லை.
  • இவ்வளவு பேசும் இவர்கள், ராஜினாமா செய்த வெற்றிவேலிடம் போய் ஏன் ராஜினாமா செய்தீர்கள் என்று கேட்டார்களா...!
  • சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அவர்களிடமாவது போய் கேட்டார்களா.. இல்லை.
  • நான் வாழ்த்த மட்டுமே வந்தேன். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.
  • எங்களுக்குப் பயமெல்லாம் கிடையாது. நான் ஒருபோதும் பயந்ததில்லை. வாழ்த்த வந்தேன். வாழ்த்துகிறேன் என்று கூறினார் விஜயகாந்த்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+